Snap Values

உலக கருணை தினத்தன்று ஆன்லைன் மூலம் கருணையை பயிற்சி செய்வது

நவம்பர் 10, 2022

ஞாயிறு உலக கருணை தினமாகும், நிஜ வாழ்க்கையிலும் மற்றும் இணையத்திலும் - கல்விக்காகவும் மக்கள் கருணையைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள். Snap-இல் கருணை எங்களின் முக்கிய மதிப்புகளில் ஒன்றாகும் மற்றும் இது தினசரி காட்டப்பட்டு கொண்டும் இருக்கிறது. கருணையைப் பரப்புவது மற்றும் அதை வெளிப்படுத்துவது இரண்டும் பாதுகாப்புடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும், ஏனெனில் பல இணையவழி பாதுகாப்பு சிக்கல்கள் கரிசனமற்ற அல்லது கடுமையான நடத்தையின் வெளிப்பாடுகளிலிருந்து உருவாகலாம்.

புதிய Snap ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள், இளைய தலைமுறையினரில் பதிலளித்தவர்களில் முக்கால்வாசி பேர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்று மாத காலப்பகுதியில் குறைந்தபட்சம் ஒரு இணையவழி ஆபத்திற்கு ஆளாகியிருப்பதாகக் காட்டுகின்றன. பதின்ம வயதினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (68%) மற்றும் 83% இளம் வயது வந்தோர் தனிப்பட்ட முறையில் சில டிஜிட்டல் ஆபத்துகளுக்கு உட்பட்டதாக தெரிவித்தனர். குறைந்தது ஐந்து பதின்ம வயதினரில் ஒருவர் (19%) அந்த ஆபத்தை இணையவழி அடாவடி அல்லது துன்புறுத்தல் எந்தக் குறிப்பிட்டனர் மற்றும் அந்த சதவீதம் இளம் வயதுவந்தோரில் அதிகரித்து 22%-ஆக இருந்தது. இரண்டு வயது புள்ளிவிவரங்களுக்கும் பிற தனிப்பட்ட ஆபத்துகளில் வெறுப்புப் பேச்சு மற்றும் பல்வேறு பாலியல் சார்ந்த ஆபத்துகள் அடங்கும்.

"இணையவழி கொடுமைப்படுத்துதல் இணையத்தை சிதைக்கிறது," என்று பவர்ஆஃப் ஜீரோவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக்கோலஸ் கார்லிஸ்லே கூறினார், இது Snap உடன் நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். "இது சிலரை வெளியேறச் செய்கிறது, மற்றவர்கள் தங்கள் இணையவழி பேச்சை மேல் முறையீடு செய்யத் தூண்டுகிறது, மேலும் இது இணைய இணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அசல் வாக்குறுதிகளுக்கு தடையாக அமைகிறது. நாம் ஒவ்வொருவரும் எங்கள் இணையவழி பேச்சில் கருணைக்கான அர்ப்பணிப்பை தொடர்ந்து மேற்கொள்வது மற்றும் தடுப்பதற்கும், புகாரளிப்பதற்கும் மற்றும் உதவி பெறுவதற்கும் எங்கள் சமூக ஊடக தளங்கள் வழங்கும் கருவிகளைப் பயன்படுத்துவதே இதற்கு மாற்று மருந்தாகும்."

கொடுமைப்படுத்துதல் மற்றும் தொந்தரவளித்தலை எதிர்த்துப் போராடுதல்

கொடுமைப்படுத்துதல் என்பது நேரடியாகவோ
இணையவழியிலோ யாருமே அனுபவிக்கத் தேவையான ஒன்றல்ல. Snapchat-இன் சமூக வழிகாட்டுதல்கள்எந்த வகையான கொடுமைப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை தெளிவாகவும் வெளிப்படையாகவும் தடை செய்கிறது. அது தளத்தில் எங்களுக்குத் தேவையில்லாத ஒன்று; Snapchat எதற்காக உருவாக்கப்பட்டது மற்றும் வடிவமைக்கப்பட்டது என்பதுடன் அது பொருந்துவதில்லை. கொடுமைப்படுத்துதல் அல்லது தொந்தரவளித்தல் உட்பட எங்கள் கொள்கைகளின் சாத்தியமான மீறல்களை யாராவது அனுபவித்தாலோ அல்லது பார்த்தாலோ அதை உடனடியாக எங்களிடம் புகாரளிக்க நாங்கள் அவர்களை ஊக்குவிக்கிறோம்.

குறிப்பிட்ட Snapகள் (புகைபடங்கள்அல்லது வீடியோக்கள்) மற்றும் கணக்குகளை மக்கள் எங்களிடம் புகாரளிக்க எங்களிடம் புகாரளிக்கும் கருவிகள் செயலியில் உள்ளன. Snapchat பயனர்கள் எங்களிடம் ஒரு உள்ளடக்கத்தைப் புகாரளிக்க அதன் மீது அழுத்திப் பிடித்தால் போதும் அல்லது எங்கள் உதவித் தளத்தில் உள்ள இந்த ஆன்லைன் படிவத்தை நிரப்பலாம். ஒருவரிடம் Snapchat கணக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தப் படிவத்தை அவர் சமர்ப்பிக்கலாம். (Snapchat-இல் புகாரளித்தல் எவ்வாறு வேலை செய்கிறது என்பது குறித்து இங்கு மேலும் அறியவும்.) 24/7 இயங்கும் Snap இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அணிகள் மூலம் புகார்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

நடவடிக்கைகள் குற்றவாளியை எச்சரிப்பது, கணக்கை இடைநிறுத்துவது அல்லது கணக்கை முழுவதுமாக நிறுத்துவது ஆகியவை அடங்கலாம்.

"நட்பை நிர்வகிக்கவும்" என்பது உள்ளிட்ட மெனு தோன்றும் வரை ஒரு நபரின் பெயரை அழுத்திப் பிடிப்பதன் மூலம் குற்றவாளியை தடை செய்யும் அல்லது நீக்கும் திறனும் உள்ளது. அந்த டிராப்பவுனில், புகாரளித்தல், தடைசெய்தல் மற்றும் நண்பரை நீக்குதல் விருப்பத்தேர்வுகள் சிவப்பு நிறத்தில் தோன்றும். துன்புறுத்துதல் அல்லது ஏதேனும் விரும்பத்தகாத நடத்தை நடந்திருக்கக்கூடிய எந்தவொரு குழு உரையாடலையும் விட்டு வெளியேறி உடனடியாக Snap-இல் புகாரளிக்க வேண்டும் என்று நாங்கள் நிச்சயமாக அறிவுறுத்துகிறோம். பழிதூற்றும் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் நடத்தைகள் பற்றி எங்களிடம் கூறுவது அனைவருக்குமான சமூக அனுபவத்தை மேம்படுத்த உதவும்.

Snapchat-இன் புதிய குடும்ப மைய அம்சத்தைப் பயன்படுத்தி தங்கள் பதின்ம வயதுக் குழந்தைகளுடன் இணையும் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் பிற நம்பகமான பெரியவர்கள் தங்களுக்குக் கவலையாக இருக்கும் கணக்குகளைப் பற்றி புகாரளிக்கலாம் - மேலும் அவர்கள் நேரடியாக செயலியில் அவ்வாறு செய்யலாம். குடும்ப மையத்திற்கான எதிர்காலப் புதுப்பிப்புகளில், பதின்ம வயதினர்கள் தங்கள் வயதுவந்த பாதுகாவலர்களிடம் Snap-இடம் புகாரளித்ததைத் தெரிவிக்கும் இயலுந்திறனும் அடங்கும்.

அதிக ஆராய்ச்சி நுணுக்கங்கள்

புதிய Snap ஆராய்ச்சி ஒட்டுமொத்த டிஜிட்டல் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் இணையவழி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை ஆராய்கிறது. ஏப்ரல் 22 மற்றும் மே 10, 2022 க்கு இடையில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் 13-19 வயதிலுள்ள பதின்ம வயதினர், இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதினரின் பெற்றோரிடம் இந்த ஆய்வு கருத்தாய்வு மேற்கொண்டது. அவர்களின் பதில்களில் தோராயமாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான இணையவழி தொடர்புகள் அடங்கும்.

இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 9003 தனிநபர்கள் பங்கேற்றனர், மேலும் முழு முடிவுகள் சர்வதேச பாதுகாப்பான இணைய நாளான பிப்ரவரி 7 2023 அன்று வெளியிடப்படும். எனினும் Snapchat மற்றும் அனைத்து சமூக ஊடகங்களிலும் அதிக ஒத்துணர்வுமிக்க மற்றும் மதிப்புகிக்க தொடர்புகளை ஊக்குவிக்க உலக கருணை தினத்தன்று நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்துகொள்கிறோம்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், ஒவ்வொரு நாட்டிற்கும் மற்றும் அனைத்து ஆறு நாடுகளுக்கும் எங்களின் முதல் டிஜிட்டல் நல்வாழ்வு குறியீடு உட்பட முழு முடிவுகளையும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்.

அதுவரையில் இனிய உலக கருணை தின வாழ்த்துக்கள். நவம்பர் 13 ஆம் தேதி மட்டுமின்றி ஆண்டு முழுவதும் கருணை காட்டுவதை இலக்காக கொள்வோம்.

- ஜாக்குலின் பியூச்சர், Snap தளத்தின் பாதுகாப்புக்கான உலகளாவிய தலைவர்

*பதின்வயதினர் மற்றும் இளைஞர்களுக்கான மாதிரி அளவு 6,002 ஆகும், இதில் 4,654 பேர் Snapchat ஐப் பயன்படுத்துபவராக அடையாளம் காணப்பட்டனர். மொத்தம் 6,087 பதிலளித்தவர்கள் Snapchat (பெற்றோர் உட்பட) பயனர்களாக அடையாளம் காணப்பட்டனர். கேள்விகள் எந்த ஒரு சமூக ஊட தள பயனர்கள் மீதும் குறிப்பாக கவனம் செலுத்தவில்லை, மாறாக இணையவழி தொடர்புகளைப் பற்றி பொதுவாகக் கேட்கப்பட்டவை.

செய்திக்குத் திரும்புக