Fentanyl உடன் தொடர்புடைய போதை மருந்துகள் சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் மிகையளவு மருந்து எடுத்து கொள்வதால் ஏற்படும் மரணங்களின் ஆபத்தான அதிகரிப்பிற்குக் காரணமாக உள்ளன. Fentanyl என்பது ஒரு சக்திவாய்ந்த ஓபியாய்டு, மண் துகள்கள் அளவுக்குச் சிறிய அளவும் மரணத்தை விளைவிக்கும். போதைப்பொருள் விற்பனையாளர்கள் பெரும்பாலும் Vicodin அல்லது Xanax போன்ற போலியான பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை தயாரிக்க fentanyl-ஐப் பயன்படுத்துகின்றனர், இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கலாம்.
இந்த நெருக்கடியின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அழிவுகாரமாக கதைகளை நாங்கள் கேட்டுள்ளோம். அதில் SnapSnapchat இல் போதைப்பொருள் விற்பனையாளர்களிடமிருந்து fentanyl-laced போலி மாத்திரைகள் வாங்கிய சம்பவங்களும் அடங்கும். எங்கள் தளத்திலிருந்து சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையை நீக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். போதைப்பொருள் போதைப்பொருள் விற்பனையாளர்களால் எங்கள் சமூகத்திற்கு ஏற்படும் தீங்குகளுக்கு பொறுப்பேற்க முன்கூட்டிய கண்டறிதல் மற்றும் சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறோம்.
Snapchat இல் எங்கள் சமூகத்தை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு என்று நம்புகிறோம், மேலும் போதைப்பொருள் விற்பனையை எங்கள் தளத்திலிருந்து ஒழிப்பதில் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டு மேம்பாடுகளை உருவாக்கியுள்ளோம், மேலும் நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துவதில் பணியாற்றி வருகிறோம். இங்கே எங்கள் பணி ஒருபோதும் முடிவடைவதில்லை, ஆனால் நாங்கள் முன்னேறும்போது புதுப்பிப்புகளைத் தொடர்புகொள்ள விரும்புகிறோம், இதனால் எங்கள் சமூகம் எங்கள் முன்னேற்றத்தைக் கண்காணித்து அதற்கான பொறுப்பாளர்களாக எங்களை நிலைநிறுத்த முடியும்.
கடந்த ஆண்டில் எங்களின் மிக முக்கியமான முதலீடுகளில் நாங்கள் எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்த செல்லுபடியாகும் சட்ட அமலாக்க கோரிக்கைகளுக்கு உதவும் எங்கள் அணியினரின் எண்ணிக்கை அதிகரிப்பதான எங்கள் சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கமுதலீடுகள் அடங்கியுள்ளன. நாங்கள் பெறும் அனைத்து வகையான சட்ட அமலாக்க கோரிக்கைகளிலும் இன்னும் செய்வதக்கான வேலை இருக்கும் அதே சமயம் எங்கள் ரெஸ்பான்ஸ் நேரம் ஆண்டுக்கு ஆண்டு 85% மேம்பாட்டுள்ளது மற்றும் அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கைகள் வந்தால் எங்கள் 24/7 அணி பொதுவாக 30 நிமிடங்களுக்குள் பதிலளிக்கிறது.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் எங்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதற்கு முன்பு, எங்கள் தளத்திலிருந்து அகற்றுவதற்கு, எங்கள் முன்கூட்டிய கண்டறிதல் திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளோம். 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் எங்கள் அமலாக்க விகிதங்கள் 112 சதவீதமாக உயர்ந்துள்ளன, மேலும் நாங்கள் முன்கூட்டிய கண்டறிதல் விகிதங்களை 260 சதவீதமாக அதிகரித்துள்ளோம். போதைப்பொருள் தொடர்பான உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு எங்கள் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மூலம் முன்கூட்டியே கண்டறியப்பட்டுள்ளது, மீதமுள்ள உள்ளடக்கம் எங்கள் சமூகத்தால் புகாரளிக்கப்பட்டு எங்கள் அணியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. போதைப் பொருள் தொடர்பான உள்ளடக்கத்தை எங்கள் சமூகம் எளிதாகவும் விரைவாகவும் புகாரளிக்க எங்கள் செயலியில் உள்ள புகாரளித்தல் கருவிகளை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றியுள்ளோம்.
எங்கள் தளத்தில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு இடையே சரியான சமநிலையை ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், இதன்மூலம் தீங்கு பயம் இல்லாமல் தங்களை வெளிப்படுத்த எங்கள் சமூகத்திற்கு அதிகாரம் அளிக்க முடியும். வடிவமைப்பின் மூலம், Snapchat பயனர்கள் அவர்களை தொடர்பு கொள்பவர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள், மேலும் நண்பர்களுடன் புதிய உரையாடல்களைத் தெரிவு செய்யவேண்டும். எங்கள் சமூகத்தின் ஒரு உறுப்பினர்கள் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை புகாரளித்தால், நாங்கள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க அது எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அணிக்கு முறையீடு செய்யப்படும். Snapchat-இல் பாதுகாப்பாக இருக்க, பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயது பிள்ளைகளுடன் கூட்டாளியாக இருப்பதற்கான கூடுதல் வழிகளை வழங்க, புதிய குடும்பப் பாதுகாப்புக் கருவிகளிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
fentanyl குறித்த ஆபத்துக்களைப் பற்றி எங்கள் சமூகத்திற்கு கற்பிக்க நாங்கள் பங்காற்ற விரும்புகிறோம். எங்கள் முயற்சிகளை தெரிவிக்க, போதைப்பொருள் மற்றும் fentanyl குறித்து இளைஞர்களின் கண்ணோட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ள Morning Consult-இலிருந்து ஆய்வை நாங்கள் நியமித்துள்ளோம், மேலும் அந்த கண்டுபிடிப்புகளை
இங்கே பகிர்கிறோம். பதின்ம வயதினர் அதிக அளவு மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், மருந்துச் சீட்டு இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதை அந்த நிலைகளை சமாளிக்கும் உத்தியாகப் பரிசோதித்து வருவதையும் அறிந்தோம். பலருக்கு ஆபத்தை மதிப்பிடுவதற்கு fentanyl பற்றி போதுமான அளவு தெரியாது அல்லது ஹெராயின் அல்லது கோகோயினை விட fentanyl குறைவான ஆபத்தானது என்று நம்புகிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் இருந்து தெளிவாகிறது. இந்த விழிப்புணர்வு இல்லாமை, ஃபெண்டானில் கலந்த ஒரே ஒரு போலி மாத்திரை மரணத்தை ஏற்படுத்தும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.